லிப்டில் சிக்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்- ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு

லிப்டில் இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் சிலர் சிக்கிக் கொண்டனர்.ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
லிப்டில் சிக்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்- ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு
Published on

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திட்டங்கள் தொடக்க விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் வருகை தந்தார்.

அப்போது 3வது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு வந்த லிப்ட் திடீரென அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் பாதியிலேயே நின்றது. இதில், லிப்டில் இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் சிலர் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீட்கப்பட்டனர். இதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com