ஆட்டோ டிரைவரை காதலித்து கரம்பிடித்த பட்டதாரி பெண்- பெற்றோர் எதிர்ப்பால் போலீசில் தஞ்சம்

சேலம் கிச்சிப்பாளையத்தில் ஆட்டோ டிரைவரை காதலித்து கரம்பிடித்த பட்டதாரி பெண், பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
காதல் ஜோடி தேவேந்திரன் - ஐஸ்வர்யா
காதல் ஜோடி தேவேந்திரன் - ஐஸ்வர்யா
Published on

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் (வயது 30). இவருக்கும் அருகில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டதாரி பெண் ஐஸ்வர்யா (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளாடைவில் காதலாக மாறியது.

வெவ்வெறு சமூகத்தை சேர்ந்த இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கிச்சிப்பாளையம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com