கொடைக்கானலில் கனமழையால் வெள்ளம்- பெரியாற்றை ஆபத்தான முறையில் கடக்கும் விவசாயிகள்

கள்ளக்கிணறு பகுதிகளில் அமைத்த இரும்பு பாலம் போல் தங்கள் பகுதியிலும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியாற்றை ஆபத்தான முறையில் கடக்கும் விவசாயிகள்
பெரியாற்றை ஆபத்தான முறையில் கடக்கும் விவசாயிகள்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, பாரதிஅண்ணாநகர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் பொருட்களை தலைச்சுமையாக சுமந்து பெரியாற்றை கடந்து வருகின்றனர். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நேற்றும் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது. இதனால் பெரியாற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

விவசாயிகள் விளைபொருட்களை தலைச்சுமையாக ஆற்றை கடந்து செல்கின்றனர். தற்போது அதிகளவு தண்ணீர் வருவதால் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமம் அடைகின்றனர். கள்ளக்கிணறு பகுதிகளில் அமைத்த இரும்பு பாலம் போல் தங்கள் பகுதியிலும் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை பெய்யும் பொழுது ஆபத்தான முறையிலேயே ஆற்றை கடந்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசனிடம் கேட்டபோது இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com