பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா- தி.க தலைவர் கி.வீரமணி பேச்சு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று பெரியார் உலகம் பிரமாண்ட கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடை பெற்ற இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழா- தி.க தலைவர் கி.வீரமணி பேச்சு
Published on

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற பெயரில் பிரமாண்ட கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று பெரியார் உலகம் பிரமாண்ட கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து விழாவில் கி. வீரமணி பேசியதாவது:-

இந்த பெரியார் உலக கட்டிடம் ரூ.60 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 6 ஆண்டில் பணிகளை முடிக்கவும் முடிவு செய்துள்ளோம். மொத்தம் 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் உலகம் உருவாக்கப்படுகிறது. அதில் தமிழ் சமூகத்தை தலை நிமிரச் செய்த பெரியாரை அனைவரும் தலை நிமிர்ந்து பார்க்கும் வகையில் 95 அடி உயரத்தில் சிலையும், 60 அடியில் பீடமும் என 155 அடியில் சிலை நிறுவப்பட உள்ளது. இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ள முதல்- அமைச்சர் கட்டிட தொடக்க விழாவிலும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com