பரமன்குறிச்சி பகுதியில் ஆஸ்பத்திரி, பள்ளிகளில் வடியாத வெள்ளம்

தோட்டத்தில் உள்ள தேங்காய்களை அப்புறப்படுத்துவதற்கு கூட விவசாயிகள் மிதக்கும் படகை தயார் செய்து தேங்காய்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.வட்டன்விளையில் உள்ள மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.
பரமன்குறிச்சி பகுதியில் ஆஸ்பத்திரி, பள்ளிகளில் வடியாத வெள்ளம்
Published on

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் உடன்குடி அருகே உள்ள சடைய நேரிகுளம் உடைந்து பல ஊர்களில் தண்ணீர் புகுந்தது. சுமார் 15 அடி உயரத்திற்கு தாழ்வான பகுதியில் இன்னும் தண்ணீர் வடியவில்லை.

பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 15 நாட்களாக தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் இன்று வரை தற்காலிகமாக பரமன்குறிச்சி கஸ்பா முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே போல பரமன்குறிச்சியில் உள்ள கே. கே.ஆர்.நடுநிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி தேங்கியுள்ள வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. அந்தப் பள்ளி வேறு ஒரு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு இன்று வரை செயல்படுகிறது.

மேலும் தோட்டத்தில் உள்ள தேங்காய்களை அப்புறப்படுத்துவதற்கு கூட விவசாயிகள் மிதக்கும் படகை தயார் செய்து தேங்காய்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போல பனை மர விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாயம் பயிரிட்ட விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

அதிலும் வட்டன்விளையில் உள்ள மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com