எழும்பூர் அரசு மருத்துவமனை மின் தூக்கியில் சிக்கித் தவித்த மருத்துவர்

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை மின்தூக்கியில் திடீர் கோளாறு. அரசு மருத்துவர் ஒரு மணி நேரம் மின்தூக்கியில் சிக்கித் தவித்த சம்பவம் அரங்கேறியது.
எழும்பூர் அரசு மருத்துவமனை மின் தூக்கியில் சிக்கித் தவித்த மருத்துவர்
Published on

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள மின் தூக்கியில் மருத்துவர் ஒருவர் சிக்கித் தவித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் ஏழாவது தளத்திற்கு வரும் போது மின் தூக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டு நின்றது. ஒரு மணி நேரமாக மின் தூக்கியில் சிக்கிக் கொண்ட மருத்துவர் ஒருவழியாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (டிசம்பர் 12) அரங்கேறி இருக்கிறது.

மருத்துவமனை மின் தூக்கியில் ஒரு மணிநேரமாக சிக்கி தவித்ததாக மருத்துவர் வீடியோ வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனைகளில் உள்ள மின் தூக்கிகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com