இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை- பாஜக தலைவர் அண்ணாமலை

காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது.3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.
இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை- பாஜக தலைவர் அண்ணாமலை
Published on

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை. திமுக அரசின் கபட நாடகம்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்.

மேலும், இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது. 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com