காரைக்குடி அருகே 100 சவரன் நகைகள் கொள்ளை- போலீசார் விசாரணை

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். சேதுராமன் வீட்டருகே இருந்த மணிகண்டன் வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
காரைக்குடி அருகே 100 சவரன் நகைகள் கொள்ளை- போலீசார் விசாரணை
Published on

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கருவியபட்டியில் 100 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முத்துமாரியம்மன் கோவில் நிர்வாக தலைவர் சேதுராமன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். சேதுராமன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கோவில் நகைகளும் திருடப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சேதுராமன் வீட்டருகே இருந்த மணிகண்டன் வீட்டிலும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

அடுத்தடுத்து நடைபெற்ற உள்ள கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com