தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது

வெங்கடேசன் பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.மதுகுடிக்க அழைத்து சென்று அவர்கள் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
தாம்பரம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் கைது
Published on

தாம்பரம்:

தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (33).ரவுடியான இவர் மீது புரட்சி பாரதம் நிர்வாகி ராஜா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர் மண்டல எஸ்.சி. அணி தலைவராக இருந்தார்.

நேற்று காலை வெங்கடேசன் பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான குணா, சதீஷ் குமார், சந்துரு, அருண் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெருங்களத்தூர் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களை மடக்கி விற்பதில் வெங்கடேசுடன் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. மதுகுடிக்க அழைத்து சென்று அவர்கள் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com