கல்பாக்கம் அருகே கரை ஒதுங்கிய விநோத படகு- அதிகாரிகள் விசாரணை

தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகை ஆய்வு செய்தனர்.கடல் சீற்றம் காரணமாக இங்கு காற்று இழுத்து வந்திருக்கலாம் என தகவல்.
கல்பாக்கம் அருகே கரை ஒதுங்கிய விநோத படகு- அதிகாரிகள் விசாரணை
Published on

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கடலில் மரத்திலான படகு ஒன்று மிதந்து கரை அருகே வந்தது.

இதை பார்த்த மீனவர்கள் படகை கரைக்கு இழுத்து வந்தனர். தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் படகை ஆய்வு செய்தனர்.

படகில் புத்தர் படங்கள், புத்தமத வழிபாட்டு முத்திரைகள், பொறிக்கப்பட்டு இருந்ததால் சீனா, மாலத்தீவு அல்லது பர்மா பகுதிகளில் உள்ளதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

மேலும், கடல் சீற்றம் காரணமாக இங்கு காற்று இழுத்து வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விநோதமான இந்த படகை அப்பகுதி மக்கள் கூட்டமாக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com