தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே

சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்று வருவது தேஜஸ் விரைவு ரெயில் இந்த விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேஜஸ் ரெயில்
தேஜஸ் ரெயில்
Published on

சென்னை:

சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்றுசெல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 26-ம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று உத்தரவு வழங்கிய மத்திய மந்திரி அஸ்வின் வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com