ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்: ஜவுளி நிறுவனத்தில் ரூ. 1.8 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கைது

மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைதான மணிக்குமார்.
கைதான மணிக்குமார்.
Published on

ஈரோடு:

மதுரை தெற்கு, புது ராமநாதபுரம் ரோடு, தியாகராஜன் பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (48). இவர், கடந்த 5 மாதங்களாக ஈரோடு, அசோக புரத்தில், வருண்ஜோதி டெக்ஸ் எனும் பெயரில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார்.

அதில், தேனி அல்லி நகரம், பங்களா மேடு திட்ட சாலை, சடைய முனீஸ்வரர் கோயில் வீதியைச் சேர்ந்த மணிகுமார் (40) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். வாரந்தோறும் ஜவுளி விற்பனை யில் வசூலாகும் பணத்தை மணிக்குமார் வங்கியில் செலுத்திவிட்டு கடை உரிமையாளரான மோகன்ராஜூக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த மாதம் 8-ந் தேதி அன்று வசூல் பணம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக மேலாளர் மணிகுமார், நிறுவன உரிமையாளர் மோகன்ரா ஜூக்கு போன் மூலமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி அன்று ஈரோடு வந்த உரிமையாளர் மோகன்ராஜ், வங்கிக் கணக்கை சரி பார்த்தபோது, கடந்த மாதம் 8-ந் தேதி அன்று மணிகுமார் குறிப்பி ட்டவாறு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தை வங்கியில் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.

அதுகுறித்து கேட்டபோது, பணத்தை தான் செலவு செய்துவிட்டதாகவும் மறு நாள் கொடுத்து விடுவதாகவும் கூறிச்சென்றவர் அதன் பின் வேலைக்கு வரவில்லையாம். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாம்.

இதையடுத்து, மோகன்ராஜ் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஆள்களுடன் மணிகுமாரை தேடி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஈரோடு பஸ் நிலையம் அருகில் மணிகுமார் நின்றிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மோகன்ராஜ் அவரை மடக்கிப் பிடித்து, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com