இன்று ஆஜராவாரா சீமான்? அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் பரபரப்பு

சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளிலும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இன்று ஆஜராவாரா சீமான்? அடுத்தடுத்து வெளியாகும் தகவலால் பரபரப்பு
Published on

சென்னை :

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று)போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அடுத்த வாரம் ஆஜராவேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.

சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையில் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் ஆஜராவதாக கூறிய நிலையில், இன்று மாலையே ஆஜராகி சீமான் விளக்கம் அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று அளித்த பேட்டியில் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆக முடியாது என்று சீமான் திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், தற்போது அவர் இன்று மாலை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று சீமான் விசாரணைக்கு ஆஜர் ஆவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனிடையே, நடிகை விஜயலட்சுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் மருத்துவமனைகளிலும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com