சேலத்தில் பல்கலைக்கழக பெண் ஊழியரிடம் நகை திருட்டு

சேலம் கருப்பூரில் பஸ்சில் செல்லும்போது பல்கலைக்கழக பெண் ஊழியரிடம் மர்ம நபர் நகையை பறித்து சென்றார்.
.
.
Published on

கருப்பூர்:

சேலம் மாவட்டம், ஓமலூர் கச்சேரி தெரு பகுதியை சேர்ந்தவர் லாவண்யா( வயது 40 ). இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தினக்கூலி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில்  ஓமலூரில் இருந்து பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை அரசு பஸ்சில் பயணம் செய்தார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. 

பல்கலைக்கழக நிறுத்தத்தில் இறங்கும் பொழுது அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. 

இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கருப்பூர் போலீஸ்  நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com