சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி

2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டம்.தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி.
சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி
Published on

சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி ரூ. 7 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்தது.

2.75 ஏக்கர் பரப்பளவில் கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கீழ் தளத்தில் பயிற்சி அறை, வீடியோ நூலக அறை, வரவேற்பு அறை, பயிற்சியாளர்கள் அறை, அலுவலக அறை, படகு நிறுத்தும் இடம், திறந்தவெளி இடம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல், முதல் தளத்தில் திறந்தவெளி வகுப்பறை, யோகா அறை, நூலக அறை, ஜிம், விளையாட்டு அறிவியல் பயிற்சி அறை வரவேற்பு அறை அமைக்கப்படுகிறது,.

இந்தத் திட்டத்தை கடந்த 2016ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

கடந்த அரசு பல்வேறு முயற்சி மேற்கொண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே, தமிழக வீரர்கள் 4 பேர் டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டியில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், பாய்மர படகு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com