என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாணியம்பாடி அருகே பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்ததால் பரபரப்பு
    X

    வாணியம்பாடி அருகே பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்ததால் பரபரப்பு

    • தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், பாறை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.
    • கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பாறை சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீது இருந்த பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், பாறை விழுந்ததில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

    கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக பாறை சரிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இரவு நேரத்தில் பாறை உருண்டு விழுந்துள்ளது. சாலை நடுவில் உள்ள பாறையை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×