சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு வேறு இடத்துக்கு மாற்றம்?- அதிகாரிகள் ஆலோசனை

மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அல்லது உழைப்பாளர் சிலை ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு வேறு இடத்துக்கு மாற்றம்?- அதிகாரிகள் ஆலோசனை
Published on

சென்னை:

குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சி ஜனவரி 26-ந்தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் காந்தி சிலை முன்பு நடைபெறுவது வழக்கம்.

இப்போது மெட்ரோ ரெயில் பணிகளுக்காக அந்த பகுதியில் வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குடியரசு தின விழாவை மெரினா கடற்கரை சாலையில் எந்த இடத்தில் நடத்துவது என்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

இதற்காக காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம், அல்லது உழைப்பாளர் சிலை ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடம் குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்த பாதுகாப்பான இடம் என்பதை இன்று ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com