

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் ஸ்ரீநாத் பக்கத்து தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் ஓட்டு போட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.யார் என்று தெரியாது. எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் யாருன்னு தெரியாது, தொகுதி எதுன்னு தெரியாது, இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்.
தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும், முதல்-அமைச்சருக்கும் அனுபவம் தெரியாது, வரலாறு தெரியாது, போராட்டமும் தெரியாது, தியாகம் தெரியாது, பிரச்சனைகளும் தெரியாது, நிர்வாகம் தெரியாது, தொகுதியும் தெரியாது, தொகுதி மக்களையும் தெரியாது, தொகுதி மக்களுடைய உரிமையும் தெரியாது, மக்களுடைய எதிர்பார்ப்பும் தெரியாது, ஆளுமையும் தெரியாது, அதிகாரமும் தெரியாது, அரவணைப்பும் தெரியாது.
தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் கால அவகாசம் எடுத்து கொள்ளலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலே ஒரு நாள் கூட தாமதித்தால் என்ன ஆகும் என்பதை இப்போது தமிழகம் பார்த்து கொண்டிருக்கிறது.
ஆகவே எதுவுமே தெரியாது, ஆனால் விஜய்க்கு மக்களை ஏமாற்ற மட்டும் தெரியும். விஜய் ஆட்சியில் தமிழ்நாட்டில் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ? என்பது நமக்கும் தெரியாது, மக்களுக்கும் தெரியாது, காலம் தான் இதற்கு தீர்வு சொல்லும். அதுவரை நாம் பொறுமையோடு தான் இதை கடந்து செல்ல வேண்டுமா என்பதை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.