பலத்த சூறைகாற்று- ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது.தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.
பலத்த சூறைகாற்று- ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Published on

ராமேசுவரம்:

தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 47 கி.மீ முதல் 55 கி.மீ. வரை சூறைகாற்று வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது. மாலை முதல் ராமேசுவரம், பாம்பன், ஏர்வாடி, தங்கச்சி மடம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறை காற்று வீசியது.

மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் அலைகள் பனைமர உயரத்திற்கு ஆக்ரோசமாக எழும்பியது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் சூறைகாற்று, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை இன்று தடை விதித்தது. மேலும் அதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ராமேசுவரம் துறை மும் மற்றும் கடற்கரைகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com