

சென்னை:
சென்னை கோடம்பாக்கத்தில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.
நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடியதை அவரது தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.