புதிய சுங்கச்சாவடி வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

புதிய சுங்கச்சாவடி வசூலுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.
Published on

சிதம்பரம்:

விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்று வர ரூ.14,090 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து, கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com