ஜே.இ.இ. நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜே.இ.இ. நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
Published on

தாம்பரம்:

சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த திருவஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பென்னிவர்ட். அவருடைய மகன் இவான் ஜோஸ்வா (வயது 17). சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ள ஜே.இ.இ. நுழைவுத்தேர்வும் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் தந்தை பென்வர்ட் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி தோழியை பார்ப்பதாக சென்று விட்டார். மகன் இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மாலையில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டதால், கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்கம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் இவான்ஜோஸ்வா தூக்குப்போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரின் சாவு குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 24-ந்தேதி வெளியான நிலையில் இவான் ஜோஸ்வா அதில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com