சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்

குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்
Published on

சென்னை:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு, துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். அப்போது கூறியதாவது:-

சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி அரசு மானியமாக தலா ஒரு லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானியம் வழங்கப்படும். 2 கோடி ரூபாய் செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்காக வரையறுக்கப்பட்டுள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்படும்.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் 200 பயனாளிகள் சுய தொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

6 மாவட்டங்களில் மகளிர் விடுதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மறு சீரமைக்கப்படும். காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும்.

குழந்தை திருமண தடைச் சட்டம் விழிப்புணர்வு பலகைகள் ரூ.62 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

பள்ளி சத்துணவு மையங்களில் ரூ.9 கோடி செலவில் முட்டை உரிப்பான் எந்திரங்கள் வழங்கப்படும்.

முதியோர்கள் பயனடையும் வகையில் ரூ.40 லட்சம் செலவில் யோகா, தியான பயிற்சி வழங்கப்படும்.

அரசினர் குழந்தைகள் இல்லங்களில் கழிவறை வசதியுடன் கூடிய அறை ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்படும்.

தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மகளிர் விடுதிகள் பதிவு உரிமம் எளிமையாக்கப்படும்.

5,590 குழந்தைகள் மையங்களை 55.90 கோடி ரூபாய் செலவில் சீர்மிகு குழந்தைகள் மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு புதிய திறன் கைபேசிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com