நாகை-இலங்கைக்கு 15 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல்-மறுமார்க்கமாக இன்று மாலை நாகை துறைமுகம் வந்தடையும்

வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.
நாகை-இலங்கைக்கு 15 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல்-மறுமார்க்கமாக இன்று மாலை நாகை துறைமுகம் வந்தடையும்
Published on

நாகப்பட்டினம்;

இந்தியா-இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை கடந்த 14-ந் தேதி காலை நாகையில் இருந்து தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த கப்பலில் 150 பேர் பயணம் செய்யலாம். முதல் நாளில் 50 பயணிகள் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணம் செய்தனர். தொடர்ந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 30 பயணிகள் நாகைக்கு வந்தடைந்தனர்.

இந்நிலையில், 7 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாலும், நிர்வாக காரணங்களாலும் நேற்று இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி என 3 நாட்கள் மட்டும் கப்பல் இயக்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, இன்று 2-வது நாளாக முன்பதிவு செய்திருந்த 15 பயணிகளுடன் காலை 7 மணிக்கு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் புறப்பட்டது.

பின்னர், மறுமார்க்கமாக மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 23 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 5 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடைய உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com