ஜூலை 8ம் தேதி நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.
ஜூலை 8ம் தேதி நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம்
Published on

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், ஜூலை 8ம் தேதி நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெறும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் அறிவித்துள்ளார்.

வெறுப்பு மேயராக, துணை மேயர் கூட்டத்தை நடத்துவார் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவை தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற கூட்டம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com