புதிய மருத்துவமனைகள் திறக்க அனுமதி இல்லை- தமிழக சுகாதாரத்துறை

தகுதியுள்ள கிளினிக்குகளுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவமனைகள் திறக்க அனுமதி இல்லை- தமிழக சுகாதாரத்துறை
Published on

தமிழ்நாட்டில் புதிதாக 8000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களில் தகுதியுள்ள மருத்துவமனைகளுக்கு மட்டும் தற்காலிக சான்றிதழ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக 8000 கிளினிக், மருத்துவமனை திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக செய்தி பரவும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997-ன் படி online web portal மூலம் பதிவு பெற வேண்டி 2019 முதல் ஏற்கனவே விண்ணப்பித்து நிலைவையில் உள்ள 8,000 விண்ணப்பங்களை முறைப்படுத்துதல் குறித்து வெளியான செய்தி குறித்த விவரம்.

21.05.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் (CEA) குறித்து ஆய்வு செய்தார்.

அப்பொழுது, 2019 முதல் விண்ணப்பித்து நிலைவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது நேர்மையான முறையில் நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள க்ளினிக்/மருத்துவமனைகளுக்கு மட்டும் தற்காலிகச் சான்றிதழ் வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.

சில செய்திகளில் வருவது போல் புதிதாக 8,000 க்ளினிக்/மருத்துவமனைகள் துவங்குவதற்கு உண்டான எந்த விதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com