என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட தடை

ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு.வழக்கு மீதான விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட தடை
Published on

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது என தொழிற்சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போராட்ட அழைப்பை எதிர்த்து என்எல்சி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com