மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய உதவும் புதிய சிகிச்சை முறை

மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய உதவும் தெரபி எனும் புதிய சிகிச்சை முறை.மூளையின் காந்த ஆற்றலை அறிந்து கொள்ள கர்மா பீக் பிரைய்ன் அறிமுகப்படுத்தும் நவீன கருவி.
மூளையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய உதவும் புதிய சிகிச்சை முறை
Published on

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ சேவை மற்றும் ஆய்வு மையம் கர்மா பீக் பிரைய்ன். இந்த சேவை மையம் ஆட்டிசம் மற்றும் மாற்று திறன் படைத்த சிறப்பு குழந்தைகளை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது இந்த மையம், மூளை பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிவதற்கு நவீன கருவி மற்றும் சிகிச்சை முறையை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்நிறுவனம் தற்போது புதிதாக கண்டுபிடித்திருக்கும் பெர்சனலைஸ்ட் ட்ரான்ஸ்க்ரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை முறையை மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் இணைந்து இந்த சிகிச்சையை நிறுவனம் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்தக் குழு மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அல்லது மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கு முன்னர் குவான்டிடேட்டிவ் எலக்ட்ரோ என்செலபோகிராம் எனும் கருவியை கண்டறிந்து, அதன் மூலமாக எந்த மாதிரியான சிகிச்சையை வழங்குவது என தீர்மானித்து அவர்களை மேம்படுத்துகிறது.

நம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை நியூரோரெஸ்டரேசன் மூலம் மேம்படுத்துவதிலும் இந்த குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தற்போது இவர்கள் கண்டறிந்திருக்கும் புதிய சிகிச்சை முறை வெகுவாக பலன் அளித்து வருகிறது. மேலும் இது நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கும், இந்த சிகிச்சையை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

கர்மா பீக் பிரைய்ன் கண்டறிந்திருக்கும் தனித்துவமான சிகிச்சை முறை தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளில் மேம்பட்டது. இதன் மூலம் நோய்க்கான அறிகுறிகளையும், நோய்க்கானக் காரணங்களையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கவனம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம், மனப்பதட்டம், மன இறுக்கம், நடத்தை பிரச்சனைகள், உறக்கமின்மை, ஒற்றைத் தலைவலி... உள்ளிட்ட ஏராளமான மூளை தொடர்பான நரம்பியல் பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சைகளை தேர்வு செய்து, அதனை எளிய முறையில் வழங்கி நோயாளிகளுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

இந்த சிகிச்சை முறைப்படி நோயாளிகளின் மூளை பகுதியை இசிஜி அல்லது ஸ்டெதஸ்கோப் மூலம் கண்டறிவது போல்.. மூளை மேப்பிங் எனப்படும் முறையை எனும் கருவியை பயன்படுத்தி மூளையின் மின்னாற்றல், அதன் இயங்குதிறன் மற்றும் செயல்பாட்டை துல்லியமாக அளவிட இயலும். இது தொடர்பான உங்களுக்கு இலவச சேவை மற்றும் மதிப்பீடுகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள எங்களுடைய contact@karmapeakbrain.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த இலவச சேவைகளை பயன்படுத்திக் கொண்டு உங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மூளை மேப்பிங் செய்து உங்களுடைய மூளையின் செயல்பாடு, இயங்குத்திறன், மின்னாற்றல் உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் நீங்கள் மேம்பட்ட தரத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ள இயலும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com