நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு - கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமின்

சுர்ஜித்தின் மீது குண்டர் சட்டம் போட்டப்பட்டுள்ளது.
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு - கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமின்
முதலில் இருப்பது எஸ்.ஐ.சரவணன், நடுவில் இருப்பவர் கவின், 3வது நபர் கொலையாளி சுர்ஜித்
Published on

நெல்லை பாளையங்கோட்டையில் கடந்தாண்டு கவின் செல்வகணேஷ் என்ற இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த கொலைவழக்கில், கவினின் தோழியின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை எஸ்.ஐ.சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி, உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் எஸ்.ஐ.சரவணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோவையில் தங்கியிருந்து காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com