முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி- ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு

வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு.வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி- ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு
Published on

பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக இரு முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் என ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளன.

வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத்தை சேர்ந்த சவுந்தரராஜன் கூறுகையில், "8 வருட கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய பதில் வராததால் வரும் 9ம் தேதி முதல் ஸ்டிரைக்" என என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com