

நெகமம் துணை மின் நிலையத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
இதனால் அன்று காலை 9 மணிமுதல், மாலை 4 மணி வரை நெகமம், சின்னேரிபாளையம், ரங்கம்புதூர், காளியப்பன்பாளையம், சின்னநெகமம், அய்யம்புதூர், உதவிபாளையம், என்.சந்திராபுரம், சாலைப்புதூர்,
கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, சிறுக்களந்தை, ஜக்கார்பாளையம், காட்டம்பட்டி, அரசூர், முகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு, ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.