கவர்னர் விழாவை புறக்கணித்த அமைச்சர்

பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.பல்கலை. துணைவேந்தருக்கு அரசின் ஒப்புதல் இல்லாத நிலையில், மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டார்.
கவர்னர் விழாவை புறக்கணித்த அமைச்சர்
Published on

சென்னை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா வேப்பேரியில் இன்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் கால்நடைத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி 1166 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் மெடல்கள் வழங்கினார்.

கேரளாவை சேர்ந்த டிரைவர் விஷ்ணுவிற்கு 13 விருதுகளை அவர் வழங்கி பாராட்டினார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் வரவேற்றார். பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்பட துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com