காலாண்டு விடுமுறை நீட்டிப்பா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும்.அர்ஜூனின் தனிப்பட்ட கருத்து முதிர்ச்சியற்ற கருத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.
காலாண்டு விடுமுறை நீட்டிப்பா?- அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
Published on

திருச்சி:

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

ஆதவ் அர்ஜூனின் தனிப்பட்ட கருத்து முதிர்ச்சியற்ற கருத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜூன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு குறித்து முதன்மை செயலாளரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com