எச்டிஎஃப்சி வங்கியில் நுழைந்து ஊழியரின் காதை வெட்டிய நபர்- போலீசார் விசாரணை

காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்டிஎஃப்சி வங்கியில் நுழைந்து ஊழியரின் காதை வெட்டிய நபர்- போலீசார் விசாரணை
Published on

சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கியில் நுழைந்த நபர் அங்கு ஊழியராக பணியாற்றி வந்த தினேஷ் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்து, வெகுநேரமாக ஆள்நடமாட்டத்தை அறிந்து தினேஷ் காதை வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த தினேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com