தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்தவர்களின் கோரிக்கை நிறைவேற்ற துணை நிற்போம்- கனிமொழி

உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.
துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி. மலர் தூவி அஞ்சலி செலுத்திய காட்சி. 
துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு கனிமொழி எம்.பி. மலர் தூவி அஞ்சலி செலுத்திய காட்சி. 
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா , தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

பின்னர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com