தண்ணீர் இன்றி பாறைகளாக தெரியும் கொடிவேரி தடுப்பணை- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர்.
தண்ணீர் இன்றி பாறைகளாக தெரியும் கொடிவேரி தடுப்பணை- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கொடிவேரி தடுப்பணை வழியாக ஆர்பரித்து கொட்டி செல்லும். இதனால் கொடிவேரி தடுப்பு அணையில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரை ரசிப்பதற்கும், குளிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக அருகே உள்ள பகுதிகளான திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

இதனால் இந்த தடுப்பணைக்கு விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கடும் வெயிலின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 1 மாதத்துக்கும் மேலாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது.

இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் கடந்த 1 மாதத்துக்கு முன்பு 80 அடிக்கு மேல் நீர் இருந்தது. அது படிப்படிாக குறைந்து தற்போது 47 கன அடி மட்டுமே உள்ளது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணைக்கும் நீர் வரத்தும் குறைந்தது. இதனால் கொடிவேரி அணையில் தண்ணீர் இல்லாமல் வரண்டு பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இதை தொடர்ந்து தடுப்பணைக்கு சென்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு பாறைகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்றனர். ஒரு சிலர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகளை ருசித்து விட்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com