

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் நேற்று கடத்திச் சென்றார்.
குழந்தையை கடத்திச் சென்ற பெண், சேலம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என தெரியவந்தது.
இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளன. குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பல வருடங்களாக குழந்தை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடி சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக வினோதினி கொண்டு வந்தபோது, காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.