கள்ளச்சாராய உயிரிழப்பு: சி.பி.ஐ. விசாரணை கேட்டு முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு

வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் ஸ்ரீதரன், அதே கோரிக்கையுடன் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கை ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து வருகிற 11-ந்தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
கள்ளச்சாராய உயிரிழப்பு: சி.பி.ஐ. விசாரணை கேட்டு முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கு
Published on

சென்னை:

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் குடித்து பலர் பலியான விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த நிலையில், வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் ஸ்ரீதரன், அதே கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை, அரசியல் கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதிகள் இந்த வழக்கை ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து வருகிற 11-ந்தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com