ஜாபர் சாதிக்கிற்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்

14 நாட்கள் அமலாக்கத்துறை காவல் மனு மீது நாளை விசாரணை.சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 நபர்களை இந்த வழக்கில் இணைக்க முயற்சி.
ஜாபர் சாதிக்கிற்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை ஜூலை 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 நாட்கள் அமலாக்கத்துறை காவல் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 நபர்களை இந்த வழக்கில் இணைக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என்று ஜாபர் சாதிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் பெயரை கூற வேண்டும் என வற்புறுத்தி வருவதாக ஜாபர் சாதிக் நீதிபதியிடம் புகார் அளித்தார்.

அதன்படி, ஜாபர் சாதிக்கை நாளை வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com