ஜாபர் சாதிக் கூட்டாளி சதாவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை

2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என தகவல்.போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியது விசாரணையில் அம்பலம்.
ஜாபர் சாதிக் கூட்டாளி சதாவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை
Published on

ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தியபோது சதா என்கிற சதானந்தம் என்பவர் போதைப்பொருள் கடத்தலில் தனக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சதாவை தேடும் பணியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதற்காக அவர்கள் சென்னை வந்தனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தேடியபோது அவர் வீட்டில் இல்லை. பின்னர் அவரது நண்பர்களிடம் விசாரித்தபோது சதா சென்னையில் பதுங்கி இருந்த இடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் பதுங்கி இருந்த சதாவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

இதில், 2018ம் ஆண்டு ரூ.25 கோடி மதிப்பிலான போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும், 2013ம் ஆண்டே சதா சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.25 கோடி மதிப்பிலான சூடோபெட்ரின் போதைப் பொருள் 2018ல் மலேசியாவிற்கு கடத்தப்பட்டது குறித்து சதாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2019ம் ஆண்டு ரூ.1.3 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com