பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் 600 டன் இரும்பு பட்டைகள் பொருத்தும் பணி தீவிரம்

பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் 600 டன் இரும்பு பட்டைகள் பொருத்தும் பணி தீவிரம்
Published on

மண்டபம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தை பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 650 டன் கொண்ட தூக்கு பாலத்தை ஹைட்ராலிக் எந்திரம் மூலம் 22 மீட்டர் உயரத்திற்கு திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை திறந்து மூட இருபுற எடையும் சமமாக இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு தூக்கு பாலத்தில் மேலே உள்ள இரு பெட்டிகளில் தலா 300 டன் வீதம் 600 டன் இரும்பு பட்டைகள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த சில நாட்களாக 600 டன் இரும்பு பட்டைகளை அதி நவீன கிரேன் மூலம் ஏற்றும் பணி கடும் சிரமத்திற்கிடையே நடந்து வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், என்ஜீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

600 டன் இரும்பு பட்டை பொருத்தும் பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும் என ரெயில்வே என்ஜீனியர்கள் தெரிவித்தனர். அதன்பின் தூக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனை நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com