நாகர்கோவிலில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க தீவிர நடவடிக்கை- அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.கோவை தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
நாகர்கோவிலில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க தீவிர நடவடிக்கை- அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி
Published on

நாகர்கோவில்:

அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு மென்பொருள் ஏற்றுமதியில் நாம் சாதனை படைத்துள்ளோம். ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மதிப்பிலான மென்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய அளவில் 3-வது இடம் ஆகும்.

வரும் காலங்களில் இது கண்டிப்பாக மேலும் அதிகரிக்கும். 2030-ம் ஆண்டு ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற கணக்கில் முதலமைச்சர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஐ.டி. துறையை பொறுத்தவரையில் 100 டிரில்லியன் டாலர் அளவிற்கு எட்ட வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது 6 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தேவையோ அங்கு அமைக்கப்படும் சோளிங்கநல்லூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாகர்கோவிலில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஐ.டி.த்துறையை பொறுத்தவரையில் எதிர்காலத்திற்கு தேவையான வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் வேலை வாய்ப்புகள் அதிகம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை வாய்ப்பு பெருகும் சூழ்நிலைகள் தான் தமிழ்நாட்டில் இன்று உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com