என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரையாண்டு தேர்வு விடுமுறை- பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்ப்பு
    X

    அரையாண்டு தேர்வு விடுமுறை- பள்ளி திறப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்ப்பு

    • அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது.
    • வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

    தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு டிச. 23-ந்தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. டிச. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது அனைத்து பள்ளி மாணவர்களும் அரையாண்டு விடுமுறையில் உள்ளனர்.

    அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2-ந்தேதி (நாளை) மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைத்தது.

    2024-ம் ஆண்டு விடைபெற்று இன்று 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

    இந்நிலையில் ஜன.2-ந்தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரையாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், மாணவர்கள் அரையாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, பள்ளிகள் திறப்பு வரும் திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வாரத்தில் பள்ளி வேலை நாள் 2 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளதால் வியாழன், வெள்ளி விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

    அதனால், பள்ளி திறப்பு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×