பெருந்துறை அருகே 400 கிலோ குட்கா பறிமுதல்

குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை அருகே 400 கிலோ குட்கா பறிமுதல்
Published on

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் எஸ்.எஸ்.ஐ. கருப்புசாமி உள்ளிட்ட பெருந்துறை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக திருப்பூர் நோக்கி வந்த ஒரு சொகுசு காரை போலீ சார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதை பாக்குகள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புனாமா ராம் சவுத்ரி (வயது 39) என்பதும், தற்போது இவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகளுக்கு நேரடியாக போதை புகையிலை மற்றும் போதை பாக்கு பொட்டலங்களை விநியோகம் செய்து வருவதை தொழிலாக வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கொண்டு வந்த 400 கிலோ எடையுள்ள ரூ.3.22 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த புனாமா ராம் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து பெருந்துறை போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com