என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி
    X

    குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி

    • மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
    • குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 12.15 மணிஅளவில் குமரி அனந்தன் காலமானார்.

    இதையடுத்து குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலில் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு உள்ளது. குமரி அனந்தன் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் நடக்கிறது. அவரது மகன் கீதன் இறுதி சடங்குகளை செய்கிறார். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

    குமரி அனந்தன் உடலுக்கு இன்று காலை முதலே தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    இதனிடையே, குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், குமரி அனந்தன் உடலுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் தந்தையை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×