கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தல்

நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தல்
Published on

சென்னை:

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

3 மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது ஒன்றிய அரசு. இதனால் நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,110-ஐ தாண்டியுள்ளது.

ஏழை, நடுத்தர வர்த்தகத்தினர் மாத பட்ஜெட் மேலும் எகிரும் வாய்ப்பு உள்ளன. எனவே ஒன்றிய அரசு கேஸ் விலை உயர்வை உடனயாக திரும்பப் பெற வேண்டும். திரும்ப பெறாத பட்சத்தில் விரைவில் ஒன்றிய அரசு அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com