போக்குவரத்து நெரிசலான சாலையில் இரவு நேரத்தில் குப்பை அகற்றும் பணி- பொதுமக்கள் வரவேற்பு

பணியாளர்களுக்கு இரவு நேர பணியின்போது பாதுகாப்புக்காக ஒளிரும் மேலாடைகள் வழங்கப்பட்டுள்ளது.காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றன.
போக்குவரத்து நெரிசலான சாலையில் இரவு நேரத்தில் குப்பை அகற்றும் பணி- பொதுமக்கள் வரவேற்பு
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூர் நகராட்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் சாலை பகுதிகளில் பகல் நேரங்களில் தூய்மைப்பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிய முயற்சியாக தற்போது இரவுநேரத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உத்தரவுப்படி 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமும் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. பணியாளர்களுக்கு இரவு நேர பணியின்போது பாதுகாப்புக்காக ஒளிரும் மேலாடைகள் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாள்தோறும் திருவள்ளூரில் உள்ள முக்கிய போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களில் இரவு நேரங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றன. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com