மலைப் பிரதேசங்களில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை- நாளை முதல் அமல்

திட்டம் முதற்கட்டமாக உதகையில் நாளை தொடங்குகிறது.மலை கிராமங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக தகவல்.
மலைப் பிரதேசங்களில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை- நாளை முதல் அமல்
Published on

2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த திட்டம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.

இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் நாளை தொடங்குகிறது.

இது படிப்படியாக மற்ற மலை கிராமங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com