ரூ.15 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் எரிந்து நாசம்
Published on

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரியாகும். ஏரியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் ஏரி மற்றும் கடலில் சுழற்சி முறையில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

கோட்டைக்குப்பம் பகுதி மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கன்னியம்மன் திட்டில் மீன்பிடி உபகரணங்கள், வலைகள், பிளாஸ்டிக்

தடுப்பு, கம்பு, இறால் வலை ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் மீன்பிடி வலைகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து அருகில் உள்ளவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு விரைந்தனர். அவர்கள் ஏரி தண்ணீர் மற்றும் மணலை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயில் எரிந்து கருகி நாசமான பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருப்பதாக திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் யாராவது தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரித்து வருகின்றனர். திடீரென தீப்பற்றி எரிந்த மீன்பிடி பொருட்களால் அப்பகுதியில் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com