மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து

பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல். மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சிலர் மாயமடைந்துள்ளதாக தெரிகிறது. மாயமான தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமுற்ற ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான தொழிலாளர்களை நிலக்கரிகளை அப்புறப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com